கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - மர்மநபர்கள் தப்பியோட்டம்

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த கோபாலபுரத்தில், பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பல் கோகுல், மனோஜ் என இரண்டு இளைஞர்கள் மீது அரிவாள், கத்தி, கம்பால் பலமாக தாக்கியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மனோஜ் தலையில் வெட்டுக்காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாவட்ட நீதிமன்றம் அருகே ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு மர்மகும்பல் தப்பிச் சென்றது.

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவா வாயிலில் கோபாலபுரம் பகுதி உள்ளது. இங்கு வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் அலுவலகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.



இப்பகுதியில் காலை முதல் இரவு வரையில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் இன்று காலையில் 10 மணிக்கு மேல் இரண்டு இளைஞர்களை, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டியது. அரிவாள், கத்தி, கம்பால் இருவரையும் சரமாரியாக தாக்கியது. ஒருவரை அரிவாளால் வெட்டி, அந்த இடத்திலேயே வெட்டி கொலை செய்தது.



இந்த கொலை சம்பவத்தை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் சத்தமிட்டனர். பயத்தில் அங்கும் இங்கும் ஓடினர். இந்நிலையில் மற்றொரு நபரை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பித்துச் சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரிவாள் வெட்டு காயத்துடன் இருந்த மற்றொரு நபரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெட்டுப்பட்டு இறந்த நபர் யார்.. அவரோடு வெட்டுப்பட்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர், இவர்களை கும்பல் கொலை செய்ய காரணம் என்ன.. என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்றும், காயமடைந்தவர் சிவானந்தாகாலணி சேர்ந்த மனோஜ் என்றும் தெரியவந்துள்ளது. இருவரும் ஒரு வழக்கு விசாரணைக்காக, கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று வந்தபோது, எதிர்கும்பல் கொலை செய்ததுதெரியவந்துள்ளது.

மாவட்ட நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் அருகில், பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...