கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் இளைஞர் படுகொலை - செல்போன் வீடியோ வெளியீடு

கோவை மாவட்ட நீதிமன்றம் அருகே கோபாலபுரத்தில், வழக்கு விசாரணைக்காக வந்த இளைஞரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக இளைஞர்களை வெட்டிய செல்போன் வீடியோ வெளியாகியுள்ளது.



கோவை: கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புள்ளவர்கள். இருவரும் வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்தனர். இந்த நிலையில், நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரம் 2 ஆவது வீதியில் இருவரும் தேனீர் அருந்த வந்துள்ளனர்.



அப்போது பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், தேனீர் கடை முன்பாக இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியான கோகுலின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலென்சில் அனுப்பி வைத்தனர். கொலை நடத்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். மேலும், உயிரிழந்த கோகுல், தமது இடுப்பில் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

நீதிமன்றத்திற்கு வந்த இளைஞர்களை, 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிய காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற வளாகம் அருகே பட்டபகலில் நடந்தேறிய இந்தக் கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...