மீண்டும் ஏறுமுகத்தில் ஆட்டோமொபைல் தொழில் - சந்தை மதிப்பீட்டாளர்கள் கருத்து!

நடப்பாண்டில் ஆட்டோமொபைல் தொழில் தொய்விலிருந்து மீண்டு வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளதாக சந்தை மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றால் கடந்த மூன்று வருடங்களாக முடங்கி கிடந்த தொழில்துறை சமீபத்தில் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றது. அதில், முக்கியத்துவம் வாய்ந்த தொழில்களில் ஒன்றாக இருப்பது ஆட்டோ மொபைல் வர்த்தகம்.

குறிப்பாக கோவிட் பெருந்தொற்றால் தொழில்கள் செய்ய முடியாத நிலையில், ஆட்டோ மொபைல் தொழில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு உற்பத்தி குறைப்பு மற்றும் விற்பனை மந்தம் ஆட்டோமொபைல் தொழில் வளத்தையே ஆட்டிப் படைத்தது.



இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு ஜனவரியை ஒப்பிடும்பொழுது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்டோ மொபைல் தொழிலுக்கு ஓரளவுக்கு கை கொடுத்து அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றது. அந்த வகையில், டெல்லியில் தேசிய அளவில் வாகன விற்பனை உயர்ந்திருப்பதாக வாகன முகவர் சங்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.

இரு சக்கர விற்பனை முந்தைய ஆண்டை விட நடப்பாண்டில் 14 % விற்பனை உயர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது அதற்கு முந்தைய ஆண்டுகளை விட 8 % குறைவு எனவும், 3 சக்கர வாகன விற்பனை பொறுத்தவரையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



அதேபோல், பயணிகளின் கார் விற்பனை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வர்த்தக வாகன விற்பனை 16 % உயர்ந்துள்ளது. பயணிகள் கார் விற்பனை சிறப்பாக நடைபெறுகிறது. அதேநேரத்தில் சிறிய கார்களின் விற்பனை சற்று தோய்வடைந்துள்ளது.



ஒட்டுமொத்தமாக பார்க்கும் பொழுது புள்ளிவிவரம் சற்று ஏறி இறங்கினாலும் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் தொழில் துறை என்பது மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்துவைத்துள்ளது.

கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் தொழில் நிறுவனங்களுக்கு ஆட்டோ மொபைல் சேவை என்பது அத்தியாவசியம் என்பதனால் இனிவரும் காலங்களில் சிறப்பான இடத்தை நோக்கி ஆட்டோமொபைல் வர்த்தகம் நகரும் என்று சந்தை மதிப்பீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...