கோவையிலிருந்து கொலை குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க நடவடிக்கை - மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் உறுதி!

கோவை மாநகரில் நடைபெற்ற அடுத்தடுத்த படுகொலை சம்பவங்கள் தொடர்பாகக் குற்றவாளிகள் வெளியூர்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க மாவட்ட எல்லையோரத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவையில் டிராவல் ஏஜென்சி நடத்தி சுமார் 3.50 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து அவரிடம் இருந்து 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,



கடந்த 2019 ஆம் ஆண்டு கவுண்டம்பாளையம் பகுதியில் தேனியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் விஜிஎம் டிராவல்ஸ் என்ற பெயரில் போலியாக டிராவல் ஏஜென்சி நிறுவனம் துவங்கி அதன் அடிப்படையில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்களிடம் மாத வாடகைக்கு கார் எடுத்து, மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை தருவதாக பொய்யான தகவல் கூறி 30-க்கும் மேற்பட்ட கார்களை வாங்கி தலைமறைவாகியுள்ளார்.



இது தொடர்பாக காரின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த சூழலில், தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 11 கார்கள் மீட்கப்பட்டுள்ளது.



மேலும் 19 கார்கள் விரைவில் மீட்கப்படும்.

வாடிக்கையாளர்களின் கார்களை வாங்கி அந்தக் கார்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபர்களுக்கு விற்று வெங்கடேஷ் மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவரை கைது செய்துள்ள நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.

கோவை மாநகரில் நேற்றும், இன்றும் நடைபெற்ற அடுத்தடுத்த படுகொலை சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகள் வெளியூர்களுக்கு தப்பி செல்லாமல் இருக்க மாவட்ட எல்லையோரத்தில் உள்ள 13 சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.

நாளை கோவை குண்டுவெடிப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் மாவட்டம் முழுவதும் 34 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே உள்ள போலீசாருடன் ஆயிரம் போலீசார் கூடுதலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மகாசிவராத்திரி விழா வருகிற 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவில்களில் மக்கள் அமைதியான முறையில் தரிசனம் செய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அதிகளவில் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த கஞ்சா சாக்லேட்டுகள் வடமாநிலத்திலிருந்து கொண்டு வருவது தெரியவந்துள்ளது.

கான்பூரில் கஞ்சா சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை முற்றிலும் ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...