கோவை மாநகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் கோல்டுவின்ஸ், நேருநகர், ஆர்.ஜி.புதூரில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி, குப்பை தரம் பிரிக்கும் பணி உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 7ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது கோல்டுவின்ஸ் சாலையில் ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



இதேபோல் நேரு நகர் கிழக்குப் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்துச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததைப் பார்வையிட்ட அவர், இது குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனத் தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் ஆர்.ஜி புதூர் லட்சுமி நகர் பகுதியில் நடைபெற உள்ள மழைநீர் வடிகால் அமையும், இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...