தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடக்கும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க கோரியும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்ககோரியும் தமிழ் புலிகள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில், மாவட்டச் செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மண்டல துணைச்செயலாளர் ஒண்டிவீரன். வடக்கு மாவட்டச் செயலாளர் கனக சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழகத்தில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளைத் தடுக்க கோரியும்,வடமாநில தொழிலாளர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்கக் கோரியும், பனியன் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அரசே நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வடிவேல், வழக்கறிஞர் அணி முருகையா பாண்டி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, தொகுதி துணைச் செயலாளர் சக்திவேல், குண்டடம் ஒன்றிய செயலாளர் மதன்குமார், குண்டடம் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் அபிஷேக் மற்றும் பழனிச்சாமி, சிவக்குமார், சந்தோஷ், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...