ஜி.ஆர்.டி கல்லூரி சார்பில் 'சுவட்ச் மாரத்தான்'


ஜி.ஆர்.டி கலை அறிவியல் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 'சுவட்ச் மாரத்தான்' என்னும் தூய்மை பணி நிகழ்ச்சி  இன்று காலை அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முன்பு நடைபெற்றது. இதனை ஜி.ஆர்.டி கல்வி நிறுவன இயக்குநர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் ராமச்சந்திரன் ஒளி தீபம் ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.



இந்த தூய்மை பணி நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி முதல் தொடங்கி ஆர்.ஜி புதூர் வரை நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தியவாரும் சாலையில் ஓடி சென்றும் பொதுமக்களுக்கு தூய்மையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 1500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குழுவாக பிரிந்து கொண்டு சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்தனர். இப்பணி காலை 7 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இது குறித்து கல்லூரி மாணவி கூறுகையில்; பாரத பிரதமர் அறிவுரையின்படி தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் எங்கள் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைத்து இப்பணியினை காலை முதல் செய்து வருகிறோம். எங்களுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் கல்லூரி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தூய்மை பணியின் மூலம் பொதுமக்களுக்கு எங்களுடைய இந்த விழிப்புணர்வு சென்றடையும். கல்லூரி மாணவர்கள் இப்பணியை ஆர்வத்துடன் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...