கோவை குண்டுவெடிப்பு தினம் - ஆர்.எஸ்.புரத்தில் நினைவு தூண் அமைக்க கோரிக்கை!

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதன் 25வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஆர்.எஸ்.புரத்தில் நினைவுத்தூண் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத மக்கள் கட்சி தலைவர் ராமநாதன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி14 ஆம் தேதி கோவை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



பலர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், மோட்சதீபம் ஏற்றி புஷ்பாஞ்சலியை பல்வேறு இந்து அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், அகில பாரத மக்கள் கட்சி சார்பாக அதன் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில் கோவை பர்லி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கையில் தீபத்தை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தினர்.



முன்னதாக செய்தியாளர்களிடம் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமநாதன் மற்றும் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர்.



அப்போது, குண்டுவெடிப்பில் இறந்த பொது மக்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றனர்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா, துணை தலைவர் சேகர், செய்தி தொடர்பாளர் நாகராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மோகன் வினோத் மணிகண்டன் மகளிர் அணி தலைவி ஷர்மிளா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...