உடுமலையில் புதிதாகக் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் - காட்சிப்பொருளாக நிற்கும் அவலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் கட்டப்பட்ட நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா முடிந்தும், இதுவரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால், பயன்பாடின்றி வெறும் காட்சிப்பொருளாக இருந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் 33வது வார்டுகளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் அடிப்படை மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய திட்டங்களுக்காக நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வக்கீல் நாகராஜன் வீதியில் செயல்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள், தாய்மார்கள் வருவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது.

நகரின் தெற்குப்பகுதியில் 16 வார்டுகளில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண தெற்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, ராமசாமி நகரில் 25 லட்ச ரூபாய் செலவில் புதிய நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. பணியில் முடிந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன் கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது.



ஆனால், இதுவரை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பயன்பாட்டிற்கு உதவாமல், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் வெறும் காட்சிப் பொருளாக இருந்துவருகிறது.

இது குறித்து சுகாதார துறையினரிடம் கேட்டபோது, நகரப்புற ஆரம்பசுகாதார நிலையங்களுக்கென அரசு உத்தரவு அடிப்படையில், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பணி நியமனத்துக்கான உத்தரவு எதுவும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை, என்றனர்.

பொதுமக்கள் நலனுக்காக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்து, காட்சிப்பொருளாக நிற்கும் கட்டத்தை விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...