கோவை அருகே பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி - தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை!

கோவைப்புதூர் அருகே கொரியர் கொடுப்பது போல் வந்த நபர், திடீரென பெண்ணை கத்தியால் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அடுத்த கோவைப்புதூர் தில்லை நகரை சேர்ந்தவர் மோதிலால் ஐடி நிறுவன ஊழியர்.



இவரது மனைவி சங்கீதா (வயது40), இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் வீட்டில் இருந்தபோது கொரியர் வந்ததாக சங்கீதாவை இளைஞர் ஒருவர் வெளியே அழைத்துள்ளார். அப்போது கொரியரை கொடுத்த அந்த நபர், சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.



அப்போது, சங்கீதா சத்தம் போட்டதால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, சங்கீதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தை அறுத்து செயினை திருட முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...