கோவை க.க.சாவடி கோயில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை க.க. சாவடி பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மாகாளியம்மன் கோயில் ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை பாலக்காடு சாலை க.க.சாவடி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில்.



இந்த கோவிலில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு கோவிலில் பூசாரி நடையை அடைத்து விட்டு சென்றுள்ளார்.

இன்று அதிகாலை கோவிலை திறந்து பூஜை செய்ய வந்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டது கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.



அதில், நள்ளிரவு சுமார் ஒன்றரை மணி அளவில் மர்ம நபர்கள் மூன்று பேர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கிருந்த உண்டியலை கடப்பாரை வைத்து உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.



மேலும் கொள்ளையடித்த பணம் நகை ஆகியவற்றை கோவிலில் இருந்த துணி ஒன்றை எடுத்து அதில் மூட்டையாக கட்டி இரு சக்கர வாகனம் மூலம் அவர்கள் தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள க.க.சாவடி காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...