கோவை மாவட்டத்தில் ரூ.52 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி

கோவை மாவட்டத்தில் 2,183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்கள் பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மகளிர் உதவிக் குழுக்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவையில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 கூட்டுறவு நகர வங்கிகள், டியூகாஸ் என்கிற துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 29 கிளைகள் மூலம் சுய உதவிக் குழு கடன் வழங்கி வருகின்றது.



இந்த நிலையில் தமிழக அரசின் ஆணையின்படி 31.03.2021 அன்று வரை நிலுவையிலுள்ள சுய உதவிக்குழுக் கடன்களை அரசு தள்ளுபடி செய்துள்ளதால், கோவை மாவட்டத்தில் 2183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்களுக்கு பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.



இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாட்டி அனைவருக்கும் வழங்கினார்.



தொடர்ந்து வேப்ப புண்ணாக்கு, உரம் தயாரித்தல், நெல் விதை தரம் பிரித்தல் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியூகாஸ் மேலாண்மை இயக்குநர் சிவகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...