கோவை மாவட்டத்தில் ரூ.52 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி

கோவை மாவட்டத்தில் 2,183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்கள் பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மகளிர் உதவிக் குழுக்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவையில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 கூட்டுறவு நகர வங்கிகள், டியூகாஸ் என்கிற துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 29 கிளைகள் மூலம் சுய உதவிக் குழு கடன் வழங்கி வருகின்றது.



இந்த நிலையில் தமிழக அரசின் ஆணையின்படி 31.03.2021 அன்று வரை நிலுவையிலுள்ள சுய உதவிக்குழுக் கடன்களை அரசு தள்ளுபடி செய்துள்ளதால், கோவை மாவட்டத்தில் 2183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்களுக்கு பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.



இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாட்டி அனைவருக்கும் வழங்கினார்.



தொடர்ந்து வேப்ப புண்ணாக்கு, உரம் தயாரித்தல், நெல் விதை தரம் பிரித்தல் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியூகாஸ் மேலாண்மை இயக்குநர் சிவகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...