வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் மறைந்து இருந்து தாக்கிய கரடி - மேற்பார்வையாளர் படுகாயம்!

கோவை வால்பாறையில் தேயிலைத் தோட்டத்திற்கு பதுங்கியிருந்த கரடி திடீரென தாக்கியதில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் புஷ்பராஜன் படுகாயம். வால்பாறை நகர்மன்றதலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் நேரில் நலம் விசாரித்து நிதியுதவி.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பன்னி மேடு தேயிலை தோட்டம். இங்குள்ள இரண்டாவது டிவிஷனில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளராக பணி புரிபவர் புஷ்பராஜன் (வயது 53). நேற்று வழக்கம்போல் அவர் தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது தேயிலைச் செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தேயிலை செடிகளுக்கு நடுவே மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென அவரது காலை கடித்தது. கரடியை பார்த்தவுடன் புஷ்பராஜன் பயங்கரமாக சத்தம் போட்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்களும் சத்தமிட்டபடியே ஓடி வந்ததால், அச்சமடைந்த கரடி அவரை விட்டுவிட்டு தப்பி ஓடியது.



கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உருளிகல் எஸ்டேட்டில் உள்ள மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



தகவல் அறிந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மருத்துவமனைக்கு சென்று, படுகாயமடைந்த புஷ்பராஜனை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதி உதவியும் வழங்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத்திற்குள் பதுங்கியிருந்து தாக்கிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...