தற்போதைய தமிழக முதலமைச்சர் நாளை பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை உள்ளது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழக முதலமைச்சர் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையை பார்த்தால் அவர் நாளை பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை உள்ளது என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் ஷ்வச் மாரத்தான் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் 1500 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு ஹோப்காலேஜ், சிட்ரா உல்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, அங்கு வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், கவர்னர் பொறுமையாக ஆழமாக யோசித்து முடிவை அறிவித்திருக்கிறாரெனவும், இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதா என நாளைக்குதான் தெரியும் என கூறினார்.

இன்று எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையை பார்த்தால் நாளைக்கு அவர் பொறுப்பில் இருப்பாரா என்ற நிலை ஏற்பட்டுள்ளது என கூறிய அவர், முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தை இரண்டு கழகங்களும் ஆண்டு அழித்து விட்டது எனவும், கழக அரசுகளால் எந்த முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியாது எனவும் கூறினார்.

இங்கு அதிகார போட்டி நடைபெற்றுவருவதாக கூறிய பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் முடிந்து விட்டன எனவும், நேர்மையான வளர்ச்சி தரக்கூடிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற புதிய தேடல் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உருவாகி உள்ளது எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...