உடுமலை அரசினர் ஆய்வு மாளிகை முன்பு குடிமகன்கள் நடமாட்டம்!

உடுமலை அரசினர் ஆய்வு மாளிகை முன்பு உள்ள திறந்தவெளி சாக்கடையில் மது பிரியர்கள் அடிக்கடி விழுந்து விடுவதால் உடனடியாக அதனை மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் ஆய்வு மாளிகைக்கு அருகே உள்ள திறந்தவெளி சாக்கடையை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அருகேயுள்ள தளி சாலையில் அரசினர் ஆய்வு மாளிகை அமைந்து உள்ளது. இந்த ஆய்வு மாளிகைக்கு உடுமலை பகுதியில் ஆய்வு செய்வதற்காக வரும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்குவதற்காக இந்த ஆய்வு மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆய்வு மாளிகை முன்பு திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதனிடையே அந்த பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் போதையில் தள்ளாடி ஆய்வு மாளிகை முன்பு உள்ள சாக்கடையில் அடிக்கடி விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக இதுவரை மூன்று பேர் அந்த திறந்தவெளி சாக்கடையில் விழுந்து உள்ளனர். இதனால் ஆய்வு மாளிகைக்கு வரும் அதிகாரிகள் முகம் சுளித்தவாறு சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மாளிகை முன்பு உள்ள திறந்தவெளி சாக்கடையை உடனடியாக மூடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் ஆய்வு மாளிகை தரப்பிலும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...