கோவை குண்டுவெடிப்பு தினத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பிரமுகர் கைது!

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் இசக்கி ராஜா என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி ஆர்.எஸ்.புரம் டி.பி ரோட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜ.க. உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதில் கலந்து கொண்ட தூத்துக்குடியைச் சேர்ந்தவரும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனருமான இசக்கி என்ற இசக்கி ராஜா (37) என்பவர் இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து, இசக்கிராஜா மீது ஆர்.எஸ்.புரம் போலீசார் இரு மதத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...