கோவை டி.கே மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்வு

கோவை டி.கே மார்க்கெட்டில் ஒரு கிலோ ஒன்றுக்கு 80 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி. விலை அதிகரித்து காணப்பட்டதால் முருங்கைக்காய் விற்பனை குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் கவலை.


கோவை: கோவை டி.கே மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வாங்குவதற்குத் தயக்கம் காட்டினர்.

கோவை உக்கடம் பகுதியில் டி.கே.மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் காய்கறிகள், வெங்காயம், உருளை கிழக்கு போன்றவை வருகின்றன. இங்கு வரும் காய்கறிகளைக் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள் வந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்வார்கள்.

அதே போல் கோவை மாநகர சுற்றுவட்டார மக்களும், காய்கறிகள் விலை கடைகளைக் காட்டிலும் குறைவாக உள்ளதால் இந்த மார்க்கெட்டிற்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வது வழக்கம். இதனிடையே இங்கு விற்பனைக்கு வந்த காய்கறிகளில் முருங்கைக்காய் விலை உயர்ந்து காணப்பட்டது.

இதனால் வியாபாரிகள் அதிகமாக முருங்கைக்காய்களை வாங்கவில்லை. மக்களும் குறைந்த அளவிலேயே வாங்கி சென்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட அனைத்து மொத்த காய்கனி வியாபாரிகள் கூறுகையில், டி.கே. மார்க்கெட் மற்றும் கோவையின் இதர மார்க்கெட்டுகளிலும் முருங்கைக்காய் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

மொத்த விற்பனை விலையில், கிலோ ஒன்றுக்கு முருங்கை ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் முருங்கைக்காயை வாங்க வந்த முருங்கை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். முருங்கைக்கு அடுத்து வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது, என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...