கோவை கோபாலபுரத்தில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு - கைதானவர்களுக்கு மார்ச் 1 வரை நீதிமன்ற காவல்

கோவை கோபாலபுரம் அருகே பட்டப்பகலில் ஒருவரை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்களை வரும் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற உத்தரவு.



கோவை: கோவை மாவட்டம் கோபாலபுரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்களை வரும் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோபாலபுரத்தில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கோவையை சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனோஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து நேற்று கோத்தகிரியில் 7 பேரை கைது செய்தனர். கைது செய்யபட்டவர்களை கோவை அழைத்து வரும்போது கௌதம், ஜோஸ்வா ஆகிய இருவரும் மேட்டுபாளையம் அருகே தப்பிச்செல்ல முயன்றபோது இருவரையும் துப்பாக்கியில் சுட்டு கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யபட்ட டேனியல், ஹரி என்ற கௌதம், பரணி சௌந்தர், அருண்குமார், சூர்யா ஆகிய ஐந்து பேரையும் கோவை மாநகர போலீசார், பாதுகாப்புடன் அழைத்து வந்து கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருத்திகா 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Links:




கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - மர்மநபர்கள் தப்பியோட்டம்

கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் இளைஞர் படுகொலை - செல்போன் வீடியோ வெளியீடு

கோவை கோபாலபுரம் இளைஞர் கொலை - தப்பியோடிய இளைஞர்களை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவை நீதிமன்றம் அருகே பட்டபகலில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு - கோத்தகிரியில் 7 பேரை கைது செய்த போலீசார்!


Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...