கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்கம்

கோவை கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு புதியதாக பல் மருத்துவர் நியமிக்கப்பட்ட நிலையில், பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. தாமோதரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை தொடங்கபட்ட பல் மருத்துவ சிகிச்சை பிரிவை எம்.எல்.ஏ தாமோதரன் இன்று திறந்து வைத்தார்.

கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு அதற்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் பல் மருத்துவர் பணியிடம் காலியாகவே இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாக பல் சிகிச்சை பிரிவு தொடங்கப்படாமல் இருந்து வந்தது.

இதனிடையே பல் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு மருத்துவரை நியமித்து மக்கள் நல்வாழ்வுதுறை சமீபத்தில் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சை பிரிவு தொடங்கபட்டது.



இந்த நிலையில் இன்று பல் மருத்துவ சிகிச்சை பிரிவை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ தாமோதரன் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



இந்த நிகழ்வில் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் வேலுமணி உள்பட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...