கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை கருத்தரங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்

கோவயில் நடைபெற்று வரும் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 'ஐஆக்ட்ஸ்க்கான் 2023' (IACTSCON) கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கு "ஐஆக்ட்ஸ்க்கான் 2023" (IACTSCON) கோவையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர். அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கலந்து கொண்டார்.



இந்திய மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதய அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகளை எடுத்துரைக்கவும், இதய அறுவை சிகிச்சை குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் இந்த கருத்தரங்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வழங்கினார்.

'பெருந்தொற்றை நாம் கையாண்டதும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களும்' என்ற தலைப்பில் அவர் பேசினார்.

இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் மெஹர்வால் மற்றும் அதன் செயலர் டாக்டர் ஹிரேமத் தலைமை தாங்கினர்.

இந்த கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்த கடந்த ஆறு மாதங்களாக உழைத்து வந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தியாகராஜமூர்த்தி தனது நன்றிகளை தெரிவித்தார். குறிப்பாக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டாக்டர் முரளிதரன் மற்றும் பொருளாளர் டாக்டர் விஜய் ஆகியோரின் பங்களிப்பிற்கு நன்றிகளை தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...