'ரவுடித்தனம் செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!' - ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

கோவையில் அடுத்தடுத்து அரங்கேறிய கொடூர கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் 2 நாட்களில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் அடுத்தடுத்த இரண்டு கொலைகள் கொடூரமான முறையில் நடைபெற்றது. பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சத்திய பாண்டியன் என்ற ரவுடி கட்டப்பஞ்சாயத்து காரணமாக சஞ்சய் தலைமையிலான ரவுடி கும்பலால் நடுத்தெருவில் விரட்டி விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி கொல்லப்பட்டார்.



அதற்கு அடுத்த நாள் காலை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் பின்புறம், குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த கோகுல் என்ற ரவுடியை ஜோஸ்வா, கெளதம் உள்ளடக்கிய ரவுடி கும்பல், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அரிவாளால் ஓட ஓட வெட்டி கொன்றது.



இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை, தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் இரு கொலைகளும் பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் அரங்கேறியிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையிலே ரவுடிகளின் அட்டூழியத்தை அடக்க கோவை மாநகர காவல் ஆனையாளர் பாலகிருஷ்ணன், ரவுடி கும்பல்களை கைது செய்ய உத்தரவிட்டார். அதனடிப்படையில், கோவை மாநகர் முழுவதும் வாகன தணிக்கை செய்து சந்தேகத்திற்கிடமானோர் வீடுகளில் தணிக்கையில் தனிப்படை போலீசார் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, கோவையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள ரவுடிகளின் பட்டியலையும் தயார் செய்த காவல்துறை, மொத்தமாக 64 வீடுகளில் சோதனை செய்து 11 வழக்குகளை பதிவு செய்து 33 ரவுடி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் 3 ரவுடிகளிடம் நன்னடத்தை பத்திரமெழுதி கையெழுத்து பெறப்பட்டுள்ளது.

தனிப்படையின் இந்த அதிரடி சோதனையில், கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் வகையில் ரவுடித்தனம் செய்யும் ரவுடிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கபடும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...