பிரபாகரன் விவகாரம் - பழ.நெடுமாறனிடம் விசாரணை நடத்த டாக்டர். கிருஷ்ணசாமி வலியுறுத்தல்!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ள விவகாரம் குறித்து பழ.நெடுமாறனிடம் உளவுத்துறை மூலம் விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


இலங்கை இறுதிப்போரின்போது மரணமடைந்ததாகக் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், நலமாக இருப்பதாகவும், விரைவில் மக்கள் முன்தோன்றுவார் என்றும் அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



இலங்கையில், 2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி போரில், முள்ளிவாய்க்காலில் மட்டுமே, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

மூன்று லட்சம் பேர் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். இந்த போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அவரது மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பில் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப் படவில்லை.

இந்நிலையில், பழ.நெடுமாறன், 'பிரபாகரன் உடல் நலத்துடன் இருக்கிறார்; அவர் விரைவில் வெளிப்படுவார்' என அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றால் தமிழர்களுக்கு மிக மகிழ்ச்சிதான். அதே சமயத்தில் ஒரு பரபரப்பை உருவாக்க அல்லது வேறு அரசியல் உள்நோக்கத்துக்காக பழ.நெடுமாறன் இப்படி தெரிவித்து இருந்தால், அது மிகப்பெரிய ஏமாற்றமாகிவிடும்.

பழ. நெடுமாறனிடம் மத்திய, மாநில அரசுகள் உளவுத்துறையைக் கொண்டு ரகசிய விசாரணையை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...