கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், 91-வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர், சத்யா நகர் மற்றும் ராமானுஜர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்குச் செல்லும் மாநகராசி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுவதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த க.விஜயகார்த்திகேயன் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, முத்தண்ணன் குளத்தின் வழியாக செல்லும் சிறுவாணி பிரதான குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருவதையும், அதேப் பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தையும், குனியமுத்தூர், சத்யா நகர் மற்றும் ராமானுஜர் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாய்கால்களுக்கு ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து, அதேப் பகுதிகளில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தினை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்ற பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுவதையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த க.விஜயகார்த்திகேயன் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, முத்தண்ணன் குளத்தின் வழியாக செல்லும் சிறுவாணி பிரதான குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருவதையும், அதேப் பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுக் கழிப்பிடத்தையும், குனியமுத்தூர், சத்யா நகர் மற்றும் ராமானுஜர் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாய்கால்களுக்கு ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளதையும் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.