தாராபுரம் அருகே அலங்கியம் நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

அலங்கியம் நெடுஞ்சாலையில் பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதியில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்டடோர் கோட்ட பொறியாளர் ராணியிடம் மனு.


திருப்பூர்: தாராபுரம் நெடுஞ்சாலையில் இரு இடங்களில் வேகத்தடை அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் கோட்ட பொறியாளர் ராணியை சந்தித்து வேகத்தடை அமைத்துத் தரக்கோரி மனு கொடுத்தனர்.



அந்த மனுவில், அலங்கியம் வழியாகச் செல்லும் நெடுஞ்சாலையில், உள்ள காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நியாயவிலைக்கடை, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.

நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் வேகமாகச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் நியாயவிலைக்கடை பகுதியில் வேகத்தடை அமைத்துக் கொடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.



மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்ட பொறியாளர் ராணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...