பவாணியின் குறுக்கே கேரளா அணை கட்டும் பணியை நிறுத்த தமிழக அரசு நீதிமன்றத்தில் தடையாணை வாங்க வேண்டும் - தபெதிக கு.ராமகிருட்டிணன்

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு விரைவாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடையாணை பெற வேண்டும் என கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தமிழகத்தில் நடந்த அரசியல் குழப்பங்களை பயன்படுத்தி கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தேக்கு வட்டை என்னும் பகுதியில் தடுப்பணையை கட்டி முடித்துள்ளது எனவும், மேலும் 6 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களும் விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்தும் தமிழக அரசு விரைந்து வழக்கு தொடுத்து முறையாக வழக்காடாத காரணத்தால் தடையாணை பெற முடியவில்லை என கூறிய அவர், மேற்கு மண்டலத்தை சார்ந்த ஒருவர் முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த பிரச்சனைக்கு முழு கவனம் செலுத்தி மீண்டும் புதிய வழக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், வரும் 19 ஆம் தேதி கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் இதில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவையிலிருந்து கேரளா செல்லும் வழித்தடங்களை அடைக்கும் வகையிலான போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...