கூடலூர் அருகே வனப்பகுதியில் திடீர் தீ - 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 10 ஏக்கர் பரப்பிலான செடி, கொடிகள் எரிந்து நாசம்.



நீலகிரி: கூடலூர் அருகே நாடு காணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயால் சுமார் 10 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது.



நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி காரணமாக வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் வறண்டு வருகின்றன. இதனால் கடும் வறட்சி நிலவ தொடங்கி உள்ள நிலையில் கூடலூர் அருகே உள்ள நாடு காணி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வனச்சரகர் சஞ்சீவ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் சுமார் 10 ஏக்கர் பரப்பிலான வனப்பகுதி எரிந்து நாசமானது.



இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிங்கார வனப்பகுதியிலும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனையும் கட்டுப்படுத்தும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



காட்டு தீ ஏற்பட்ட இடத்தில் டெட்டனேட்டர் குச்சிகள் கண்டு பிடிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் கோட்ட உதவி வன அலுவலர் கருப்பையா மற்றும் தேவாலா போலிசார் டெட்டனேட்டர் குச்சிகளை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த டெட்டனேட்டர் குச்சிகள் வெப்பத்தினால் தீ பற்றிய போது காட்டு தீ ஏற்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...