பல்லடம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து -அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்!

பல்லடம் அருகே உகாயனூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், வகுப்பு முடிந்து வேனில் வீடு திரும்பியபோது மாதப்பூரில் விபத்துக்குள்ளானது. விபத்தில் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உகாயனூரில் ராஜா நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. 20 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்களோடு பள்ளி முடிந்ததும் வாடகை வேனில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.



இந்த வேனை நாகராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். வேன் மாதப்பூர் வந்த போது எதிர்பாராத விதமாகப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறினர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவர்களை பத்திரமாக மீட்டனர்.



இந்த விபத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளி வாகனத்தைப் பொதுமக்கள் மீட்டனர். பின்னர் வேறு பள்ளி வாகனம் வரவழைக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...