உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியல் - 62 பேர் கைது

உடுமலை மின்வாரிய மேற்பார்வைப்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு உடுமலை மின் வட்டக்கிளை சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடுமலை-திருப்பூர் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு துணைத்தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன், ஜெகதீசன் ஆகியோர் மறியல் போராட்டத்தின் அவசியம் குறித்துப் பேசினர்.

இதில், மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும், காலியாக உள்ள களப்பணியிடங்களில் ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்த மறியல் போராட்டத்தால் உடுமலை-திருப்பூர் சாலையில் போக்குவரத்து பாதித்தது. இதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...