போச்சம்பள்ளி ராணுவ வீரர் கொலை விவகாரம் - பா.ஜ.க கண்டன ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரர்கள் பிரபு மற்றும் பிரபாகர் ஆகிய இருவரையும் திமுக கவுன்சிலர் சின்னச்சாமி உள்ளிட்ட கும்பல் தாக்கியதில், ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து, பொள்ளாச்சி நகர பாரத ஜனதா கட்சி சார்பில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கோவை மாவட்ட தலைவர் வசந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ரவுடிகள், கூலிப்படைகள் அதிகரித்து வருகிறது. கொலை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. கோவை நீதிமன்ற வளாகத்தில் வெட்டி கொலை செய்யும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.

தற்போது, இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை திமுக கும்பல் கொலை செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...