மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக தோல் தானம் - மருத்துவர்கள் சாதனை!

மேட்டுப்பாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜ் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக தோல் தானம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக உயிரிழந்த நபரின் தோல் தானமாக பெறப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (31). இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.



இதனையடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, உயிரிழந்த நாகராஜ் உடலில் இருந்து தோல் மற்றும் கண்களை தானம் செய்ய அவரது தாய் வள்ளி ஒப்புதல் அளித்தார்.



இந்நிலையில் கோவையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். உடல் உறுப்புகளை தகுந்த பாதுகாப்பு வசதியுடன் எடுத்து செல்ல கூடிய பெட்டிகளுடன் வந்த மருத்துவர்கள் நாகராஜின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

நாகராஜின் உடலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தோல் தீக்காயம் ஏற்பட்டு தோல் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விபத்தில் சிக்கி பெரிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ பரிசோதனைக்கு பின் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை உருவாகிய 138 ஆண்டுகளில் இதுவரை தோல்தானம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...