கோவை சுந்தராபுரத்தில் குப்பைமேடாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்கா!

கோவை சுந்தராபுரம் அருகே செயல்பட்டு வரும் சிறுவர் பூங்காவில் குப்பைகள் தேங்கியுள்ள நிலையில், உடனடியாக குப்பைகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே குப்பைமேடாக காட்சியளிக்கும் சிறுவர் பூங்காவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுந்தராபுரம் அடுத்த மதுக்கரை சாலையில் உழவர் சந்தை அருகே சிறுவர் பூங்கா செயல்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக அங்கு செல்வது வழக்கம்.

மேலும் அதிகாலை 5 மணியில் இருந்து 8 மணி வரை நடைப்பயிற்சி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதுதவிர மாலை நேரங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

இந்த நிலையில் சிறுவர் பூங்காவில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடப்பது அங்கு வரும் பொதுமக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் இலைகள், காய்ந்து சருகுகளாக ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சுந்தராபுரம் பகுதியை பொறுத்தவரை பொழுது போக்குவதற்கு என்று குறிப்பிட்ட இடம் கிடையாது. இந்த ஒரு பூங்கா மட்டுமே உள்ளது.

ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாக காட்சி அளிக்கிறது. இங்கு வாரத்திற்கு ஒரு முறை தான் குப்பைகளை அகற்றுகின்றனர். குப்பைகள் தேங்கும் காரணத்தால் பூங்காவிற்குள் கொசுக்கள் அதிகரித்துள்ளது, என்றனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...