பீட்ரூட்டுக்கு நிலையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - உடுமலை விவசாயிகள் கோரிக்கை!

உடுமலை அருகே சீதோஷ்ண நிலை மற்றும் இடைத்தர்கள் காரணமாக பீட்ரூட் விலை குறைந்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறை சார்பில் நிலையான விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பீட்ரூட்க்கு நிலையான விலை கிடைக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.



உடுமலை மற்றும் குடிமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் கிணற்று பாசனத்தில் பீட்ரூட் பயிரிடப்படுகிறது. பொங்கல் பண்டிகை சீசனில், கிலோ, 30 ரூபாய் வரை பீட்ரூட் கொள்முதல் செய்யப்பட்டது.



ஆனால், தற்போது பல்வேறு காரணங்களால், விலை வேகமாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக, விலை கிலோ, 10 ரூபாய்க்கும் குறைவாக விலை போகிறது.

சபரிமலை சீசன் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு, காய்கறிகளின் நுகர்வு குறைந்து, வரத்து அதிகரித்துள்ளதே விலை சரிவிற்கு முக்கிய காரணம் என வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தற்சமயம் சீதோஷ்ண நிலை காரணமாகவும், இடைத்தரகர்கள் ஆதிக்கம் காரணமாகவும், பீட்ரூட் விலை கடுமையாக குறைந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...