பல்லடம் கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழா - 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு

பல்லடம் அருகேயுள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் 3,000-கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோளறுபதி நவகிரக கோட்டையில் மகாசிவராத்திரி விழாவில் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



பல்லடம் அடுத்த சித்தம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள கோளறுபடி நவகிரக கோட்டையில் மகா சிவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.



மாலை 6 மணிக்கு கோ பூஜை, முதற்கால வேள்வி, மகா அபிஷேகம், மகா தீபாராதனை சிவன் - பார்வதி திருக்கல்யாண நிகழ்வுடன் தொடங்கியது.



இந்நிலையில், ஐந்து கால வேள்வி பஜனை, ஞான குருவின் சத்சங்கம் சிவ நாம கூட்டுப் பிரார்த்தனை இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் முழு இரவு பிராத்தனைகளோடு காலை 6 மணி வரை சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது.



இந்த நிகழ்வில் குழந்தைகள் சிவபெருமான் பார்வதி வேடம் அணிந்து பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியும் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

அதிகாலை 6:00 மணி அளவில் ஐந்தாம் கால வேள்வி சிவபெருமான் மகாபலி அம்மையப்பர் திருவீதி உலா ரோடு சிவராத்திரி திருவிழா நிறைவடைந்தது.



இந்த மகா சிவராத்திரி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...