தாராபுரம் அருகேயுள்ள அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்!

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் அமராவதி ஆற்றில் முதலை உலா வருவதை கண்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், ஆற்றில் முதலை உலா வருவதால் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாராபுரம் அருகேயுள்ள வீராச்சிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அமராவதி ஆற்றங்கரையோரம் கட்டியிருந்த தனது மாட்டில் பால் கறக்க சென்றுள்ளார். அப்போது ஆற்றில் சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று உலா வந்துள்ளது.

முதலையைப் பார்த்த அவர், பயத்தில் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு அருகிலிருந்த மக்கள் வந்து பார்த்த போது முதலை இல்லை. இந்நிலையில் அவரை தொடர்ந்து ஆற்றங்கரைக்குச் சென்ற சிலர், முதலை நீரில் நீந்துவதைப் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனே காங்கேயம் வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஆற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள், முதலை உலா வருவதால், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் முதலையை உடனடியாக பிடிக்க கோரி கிராம மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...