ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 பேஷன் சோ

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை சார்பில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 என்னும் ஆடை அழங்கார நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், மியா அன்டு மாயா பேஷன் அபேரல்ஸ் திருப்பூர் முதன்மை நிர்வாக அதிகாரி கேபிஜி.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்களை பேஷன் வடிவமைப்பில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார். அவர், தன்னுடைய உரையில் மாணவர்களை நவீன தொழில்நுட்பங்களை ஆடை வடிவமைப்பில் பயன்படுத்துமாறு கூறினார். மேலும், இத்துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பேஷன் சோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு விதமான அழங்கார ஆடைகளை உடுத்தி மாணவர்களும், மாணவிகளும் வலம்வந்தனர்.



மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய ஆடைகளை அணிந்துகொண்டு மாடல்கள் பேஷன் சோவில் கலந்துகொண்டனர். இந்த பேஷன் சோவை இத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த பேஷன் சோ மாணவர்களுடைய திறனையும், அவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துவதாகவும் நடத்தப்பட்டது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...