ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை சார்பில் எஷ்டிலோ விஜ்ஜோ டேலன்டொ இன்விசிபில்'17 என்னும் ஆடை அழங்கார நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மியா அன்டு மாயா பேஷன் அபேரல்ஸ் திருப்பூர் முதன்மை நிர்வாக அதிகாரி கேபிஜி.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்களை பேஷன் வடிவமைப்பில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார். அவர், தன்னுடைய உரையில் மாணவர்களை நவீன தொழில்நுட்பங்களை ஆடை வடிவமைப்பில் பயன்படுத்துமாறு கூறினார். மேலும், இத்துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பேஷன் சோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு விதமான அழங்கார ஆடைகளை உடுத்தி மாணவர்களும், மாணவிகளும் வலம்வந்தனர்.

மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய ஆடைகளை அணிந்துகொண்டு மாடல்கள் பேஷன் சோவில் கலந்துகொண்டனர். இந்த பேஷன் சோவை இத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த பேஷன் சோ மாணவர்களுடைய திறனையும், அவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துவதாகவும் நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில், மியா அன்டு மாயா பேஷன் அபேரல்ஸ் திருப்பூர் முதன்மை நிர்வாக அதிகாரி கேபிஜி.மகேஸ்வரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் மாணவர்களை பேஷன் வடிவமைப்பில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார். அவர், தன்னுடைய உரையில் மாணவர்களை நவீன தொழில்நுட்பங்களை ஆடை வடிவமைப்பில் பயன்படுத்துமாறு கூறினார். மேலும், இத்துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பேஷன் சோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு விதமான அழங்கார ஆடைகளை உடுத்தி மாணவர்களும், மாணவிகளும் வலம்வந்தனர்.

மாணவர்கள் வடிவமைத்து உருவாக்கிய ஆடைகளை அணிந்துகொண்டு மாடல்கள் பேஷன் சோவில் கலந்துகொண்டனர். இந்த பேஷன் சோவை இத்துறையைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 வருடங்களாக நடத்தி வருகின்றனர். இந்த பேஷன் சோ மாணவர்களுடைய திறனையும், அவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துவதாகவும் நடத்தப்பட்டது.
