சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நாளை வாக்களிக்க வேண்டும், முன்னாள் மேயர் ராஜ்குமார் பேட்டி


ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்காத சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் மக்களிடம் வாக்கு கேட்டு வர முடியாத சூழல் இருப்பதை உணர்ந்து பெரும்பான்மை கோரும் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக நாளை நடைபெறும் பெரும்பான்மை நிரூபிக்கும் தேர்தலில்  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என அத்தொகுதியின் பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை கணபதி பகுதியில் பன்னீர்செல்வம் ஆதரவாளரும் முன்னாள் மாநகர மேயருமான கணபதி ராஜ்குமார் தலைமையில் கூடிய அதிமுகவினர் சட்டமன்ற உறுப்பினரான பி.ஆர்.ஜி அருண்குமார் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வாக்களிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். 

தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் தெரிந்து கொள்ளும் வகையில் கையெழுத்து இயக்கமும் நடத்தினர்.அப்போது பேசிய கணபதி ராஜ்குமார், சட்டமன்ற உறுப்பினர்களை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூவத்தூரில் இருப்பது மட்டுமே ஊடகங்கள் மூலம் தெரியவருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் அவரது கவனத்திற்கு மக்களின் எண்ணங்களையும், கட்சி தொண்டர்களின் மன நிலையையும் எடுத்து கூறும் வகையில் இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வாக்களிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் வாக்குகள் கோரி மக்களை சந்திக்க வர முடியாத நிலை இருப்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறிய அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் கட்சிக்கு எந்த வகையிலும் தொடர்பு  இல்லாதவர்களும் கட்சியை கைப்பற்ற துடிக்கும் முயற்சியை முறியடிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...