நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி போராட்டம் - பரபரப்பு

கோத்தகிரியை சேர்ந்த யாகூப் என்ற மாற்றுத்திறனாளி காந்தி மைதானம் அருகே தனக்காக ஒதுக்கப்பட்ட கடை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதாக பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து தர்ணா போராட்டம்.


நீலகிரி: தனக்காக ஒதுக்கப்பட்ட கடை வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதை கண்டித்து மாற்றுத்திறனாளி ஒருவர், நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோத்தகிரியில் வசித்து வருபவர் முகமது யாகூப். மாற்று திறனாளியான இவர், கோத்தகிரி பேருந்து நிலையத்திற்கு அருகில் தள்ளு வண்டியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பேரூராட்சியின் செயல் அலுவலர், இவரது கடையை காந்தி மைதானம் அருகே உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடத்திக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனை நம்பி யாகூப் தன்னுடைய கடையை காந்தி மைதானம் அருகில் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடையை மாற்றம் செய்வதற்காக அங்கு சென்று பார்த்த பொழுது தனக்கு ஒதுக்கிய இடத்தை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.



இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த யாகூப் மாவட்ட ஆட்சியரை அணுகி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் அருகே படுக்கை விரிப்பு மற்றும் கம்பளியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேசி சமாதானம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு தொடர்பு கொண்டு கடை கிடைப்பதற்கு உண்டான வழி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் யாகூப் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

இச்சம்பவம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...