கிணத்துக்கடவு அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி - வனத்துறை விசாரணை!

கோவை கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது குறித்து வனத்துறை விவசாரணை நடத்திவருகிறது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் இருந்து பணப்பட்டி செல்லும் சாலையோரங்களில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் புள்ளிமான்கள் அதிகம் உள்ளது.



இந்த நிலையில் நேற்றிரவு சாலையில் சுற்றித்திரிந்த புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியதில், அது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.



இன்று காலை வழக்கம்போல் அவ்வழியாக சென்ற மக்கள், இறந்து கிடந்த புள்ளி மானைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் புள்ளிமான் இறப்பு குறித்து கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



புள்ளிமான் உண்மையிலேயே வாகனம் ஏதும் மோதி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்கிற கோணத்தில் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...