திருப்பூர் அருகே வாய்க்காலில் மாயமான மகனை கண்டுபிடித்து தரக்கோரி எஸ்.பியிடம் மனு

திருப்பூர் அருகே நல்லூரை சேர்ந்த சங்கீதா என்பவரின் மகன் சஞ்சய், நண்பர்களுடன் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றவர் காணவில்லை என்று, அவரது தாய் சங்கீதா திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



திருப்பூர்: ஆண்டிபாளையம் வாய்க்காலில் விழுந்து மாயமான மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய், மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சார்ந்தவர் சங்கீதா. இவரது மகன் சஞ்சய்(19), திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி நண்பர்களுடன் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார்.

வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்த போது திடீரென சஞ்சய் நீரில் அடித்துச் செல்லப்படதாகவும், மேலும் நண்பர்கள் சஞ்சையை காப்பாற்ற முயற்சி செய்ததாகவும், ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் சஞ்சயை மீட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் நீரில் அடித்து செல்லப்பட்ட சஞ்சயை தேடினர். ஆனால் வாய்க்காலில் அதிக அளவில் நீர் செல்வதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில் சஞ்சயின் தாயார் சங்கீதா மற்றும் அவர்களது உறவினர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.



அதில் வாய்க்காலில் விழுந்து காணாமல் போன தனது மகனின் உடலை கண்டுபிடித்து தரக்கோரியும், அதற்காக ஆண்டிபாளையம் வாய்க்காலுக்கு வரும் நீரை நிறுத்தியோ அல்லது வேறு பகுதிக்கு மாற்றியோ விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...