கோவை காந்திபுரத்தில் கத்தி முனையில் டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த மூவர் கைது!

கோவை காந்திபுரத்தில் உள்ள டாஸ்மாக் பார் சப்ளையர் ராஜ்குமாரிடம், கடை திறப்பதற்கு முன்பே மதுபாட்டில் கேட்டு தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை காந்திபுரம் அருகே டாஸ்மாக் பார் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கையை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவர் கோவையில் தங்கி காந்திபுரம் 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காலை ராஜ்குமார் பாரில் சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், ராஜ்குமாரிடம் மதுபாட்டில் தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் கடை திறக்கவில்லை, 12 மணிக்கு பிறகு வந்து வாங்குமாறு தெரிவித்துள்ளார்.

இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமாரை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் ஊழியர் ராஜ்குமார் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், பார் ஊழியர் ராஜ்குமாரை தாக்கி பணம் பறித்தது ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த மோசஸ் (28), வ.உ.சி வீதியை சேர்ந்த மெக்கானிக் தீபக் (20) மற்றும் பட்டேல் வீதியை சேர்ந்த பூபதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே கோவையில் உள்ள காவல் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...