புதிய மின் இணைப்பு பெற உரிமைச்சான்று கேட்கும் மின்சார வாரியம் - தவிக்கும் உடுமலை மக்கள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்கும் நிலையில், வருவாய் துறையினர் உரிமை சான்று கொடுக்க மறுப்பதால் செய்வதறியாது பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் புதிய மின் இணைப்பு பெற மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்பதால் பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, பல இன்னல்களுக்குப் பிறகு புதிய வீடு கட்டி அதற்கு, மின் இணைப்பு பெறுவதற்காக மின் வாரியத்தை அணுகும்போது ஆதார் நகல், வீட்டு பத்திரம், வீட்டு வரி ரசீது உள்ளிட்டவைகளோடு, இடத்துக்கு சொந்தக்காரர் அவர் தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதை வாங்க, வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகினால், உரிமைச்சான்று வழங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் பலரும் தவிக்கும் நிலை உரு வாகியுள்ளது.

இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் உரிமைச்சான்று இல்லாமலேயே மின் இணைப்பு பெற்று தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் கடன் பெறுவதற்கு உரிமைச்சான்று தேவையில்லை என்று அறிவித்தது போல மின் வாரியத்திலும் அறிவிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

புதிய மின் இணைப்பு பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் பட்டியலில் உரிமைச் சான்று குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்த விவரம் தெரிந்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பு பெறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...