கோவை கிராமங்களில் புகுந்த மக்னா யானை - மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கத் திட்டம்?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறி, குனியமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் மக்னா யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி 2வது நாளாக நீடிக்கிறது.



கோவை: தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சீட் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னாயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி நேற்று கோவை மாவட்டம் மதுக்கரை பகுதிக்கு வந்தது.

ஊருக்குள் புகுந்த யானை ஒரு வீட்டில் சுற்றுப்புற சுவரை இடித்து தள்ளியது மேலும் ஒரு வனத்துறை வாகனத்தையும் சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்து பி.கே.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் உலா வந்த யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

நேற்றிலிருந்து வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதி நோக்கி வந்த யானையை 75க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி தொடர்கிறது.



மதுக்கரையில் இருந்து குனியமுத்தூர் பகுதிக்கு வந்த யானை, புட்டு விக்கி பாலம், நொய்யல் ஆற்று பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது.



குடியிருப்பு பகுதியில் இருந்து சற்று விலகி இருக்கும் மக்னா யானை, குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



நேற்றைய தினம் யானை இருக்கும் பகுதிக்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஸ், பொதுமக்களை கட்டுப்படுத்துவதற்கு கோவை மாநகர காவல் துறையினர் பணியில் ஈடுபடுவர் என தெரிவித்திருந்ததையடுத்து யானையை விரட்டும் பணியில் வனத்துறையினரும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணியில் மாநகர காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

வனப்பகுதிக்குள் யானையை விரட்ட முடியாதபட்சத்தில், தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி மக்னாவை பிடிக்கவும் வனத்துறையினர் திட்டுமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...