பல்லடத்தில் குடிபோதையில் மோதல் - 2 பேருக்கு கத்திக்குத்து, ஒருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபான கடையில் ராஜ்கமல், தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகியோர் மதுகுடித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற ராஜ்கமலை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பால்காரர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்கமல். இவர் தனது நண்பர்கள் சிலருடன் சேடபாளையம் ஸ்டாலின் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று அனைவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் நண்பர்கள் உட்பட நான்கு பேரும் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த ராஜ்கமல் தான் மறைத்து எடுத்துச் சென்றிருந்த கத்தியால் சக நண்பர்களான தர்மராஜ் மற்றும் கண்ணன் ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து மற்றொரு நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.



இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக ராஜ் கமலை பல்லடம் போலீசார் கைது செய்தனர். மதுபோதையில், உடன் சென்ற நண்பர்களை சக நண்பரே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...