கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் இன்று ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்டின் தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் நடைபெற்றது. உடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாண்மை இயக்குநரும், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், மத்திய நகர்புற மேம்பட்டு அமைச்சக ஒருங்கிணைந்த நிதி கோட்ட இயக்குநர் மஜூம்தார், துணை ஆணையாளர் காந்திமதி, மாநகரப் பொறியாளர் (பொ) நடராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.