கோயம்புத்தூர் மாநகராட்சியில் வரும் பிப்.25, 26 தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு நடப்பு நிதியாண்டின்‌ இரண்டாம்‌ அரையாண்டிற்கான செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ முதலிய அனைத்து நிலுவைகளையும்‌ செலுத்த பொதுமக்களின்‌ நலன் கருதி வருகின்ற 25 மற்றும் 26ஆம் தேதிகளில் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறுகிறது.


கோவை: கோவை மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்கள் சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில்‌ நடப்பு 2022-231 நிதியாண்டின் இரண்டாம்‌ அரையாண்டிற்கான செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ முதலிய அனைத்து நிலுவைகளையும்‌ செலுத்த பொதுமக்களின்‌ நலன் கருதி மாநகராட்சியின்‌ கீழ்க்கண்ட வார்டு பகுதிகளில்‌ 25.02.2023ம்‌ மற்றும்‌ 26.02.2023ம்‌ தேதிகளில்‌ சிறப்பு வரிவசூல்‌ முகாம்கள்‌ நடத்தப்பட உள்ளன.

இதில்‌ கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.5இல்‌ வளியாம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.6இல்‌ வீரியம்பாளையம்‌ பகுதி, வார்டு எண்‌.7 மற்றும்‌ 8இல்‌ காளப்பட்டி நேரு நகா்‌ பள்ளியிலும்‌, வார்டு எண்‌.56இல்‌ சூர்யா நகர் - ரயில்வே கேட்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌. 5இல்‌ ஒண்டிபுதூர் நெசவாளர்‌ காலனி பகுதியிலும்‌ நடைபெற உள்ளது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.17இல்‌ தேவி கார்டன்‌ -டிவிஎஸ்‌ நகர் ரோடு, கவுண்டம்பாளையம்‌, வார்டு எண்‌.35இல்‌ தேவாங்க நகர்-கற்பக விநாயகர் கோவில்‌ எதிர்புற புதிய மாநகராட்சி கட்டிடப்பகுதியிலும்‌, 26.02.2023 அன்று வார்டு எண்‌.36இல்‌ நியூ தில்லை நகா்‌ 5ஆவது கிராஸ்‌ - குடியிருப்போர் நல சங்கம்‌ வளாகத்திலும்‌, வார்டு எண்‌.75இல்‌ 25.02.2023 அன்று சீரநாயக்கன்பாளையம்‌- நேதாஜி வீதி-மாரியம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, 26.02.2023 அன்று அருந்ததியர்‌ காலனியிலும்‌, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.100இல், கணேசபுரம்‌ - அரசு நடுநிலைப்பள்ளி, வார்டு எண்‌.88இல்‌ குனியமுத்தூர்-தாமராஜா திரெளபதி அம்மன்‌ கோவில்‌ வளாகத்திலும்‌, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.15 சுப்ரமணியம்பாளையம்‌- வார்டு அலுவலகம்‌ அருகிலும்‌, வார்டு எண்‌.18 புது தோட்டம்‌ பழைய ரேசன்கடை அருகிலும்‌, வார்டு எண்‌ 19இல்‌ மணியகாரம்பாளையம்‌- அம்மா உணவகம்‌, வார்டு எண்‌.21ல்‌ ஜனதா நகர்- எம்‌.ஜி.ஆர்‌ நகா்‌ பகுதியிலும்‌, வார்டு எண்‌.25இல்‌ காந்தி மாநகா்‌ - அரசு மேல்‌ நிலைப்பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌ 28இல்‌ காமதேனு நகர் - வார்டு அலுவலகத்திலும்‌ நடைபெற உள்ளது.

மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்‌.32இல்‌ சிறுவா பூங்கா, சங்கனூர்‌ நாராயணசாமி வீதியிலும்‌, வார்டு எண்‌ 62. சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌, வார்டு எண்‌.63இல்‌ ஒலம்பஸ்‌- 80 அடி ரோட்டில்‌ உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திலும்‌, வார்டு எண்‌ 80இல்‌ கெம்பட்டி காலனி - மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும்‌ மற்றும்‌ வார்டு எண்‌ 84இல்‌ ஜி.எம்‌. நகரில்‌ உள்ள தாகத்‌ இஸ்லாம்‌ பள்ளியிலும்‌ நடைபெற உள்ளது.

மேலும்‌, 31.03.2023 வரை சனி மற்றும்‌ ஞாயிற்றுக்கிழமைகளில்‌ அரசு விடுமுறை நாட்கள்‌ நீங்கலாக ஏனைய நாட்களில்‌ அனைத்து வரிவசூல்‌ மையங்களும்‌ வழக்கம்போல்‌ காலை 9மணி முதல்‌ மாலை 4 மணி வரை செயல்படும்‌. எனவே, பொதுமக்கள்‌ இவ்வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...