கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் பற்றி எரிந்த வாகனங்களால் பரபரப்பு

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில், மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தின் ஒரு பகுதியில், மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ள வாகனங்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.



இந்நிலையில் இன்று மாலை திடீரென சுமார் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.



இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.



இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெயிலின் காரணமாக தீப்பற்றி இருக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த தீ விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின.



வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...