ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் ‘விஷன் நானோ-2017’ எனும் தலைப்பிலான ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் அலமேலு சிறப்புறை வழங்கினார். கல்லூரி இணை அறங்காவலர் லஷ்சுமிநாராயணஸ்வாமி தலைமை வகித்தார்.
நானோ டெக்னாலஜி துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், காரைக்குடி - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மற்றும் மூத்த விஞ்ஞானி விஜய மோகனன் பிள்ளை, திண்டுக்கல் - காந்தி கிராம் பல்கலை கழக நானோ துறை இயக்குனர் ஜான் ஆபிரகாம், கல்பாக்கம் - இந்திரா காந்தி அணு மின் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜாண் ஃபிலிப், மற்றும் சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழக உலோகத் துறை பேராசிரியர் டிஜு தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, நானோ திரவங்கள், சுற்றுச்சூழல் வளங்கள், ஸ்மார்ட் பொருட்கள், பேட்டரீஸ், மற்றும் உயிர் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதில், துறைத் தலைவர் டேனியல் தங்கதுரை, பேராசிரியர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
நானோ டெக்னாலஜி துறை சார்பில் நடந்த கருத்தரங்கில், காரைக்குடி - மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் மற்றும் மூத்த விஞ்ஞானி விஜய மோகனன் பிள்ளை, திண்டுக்கல் - காந்தி கிராம் பல்கலை கழக நானோ துறை இயக்குனர் ஜான் ஆபிரகாம், கல்பாக்கம் - இந்திரா காந்தி அணு மின் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஜாண் ஃபிலிப், மற்றும் சென்னை - இந்திய தொழில்நுட்பக் கழக உலோகத் துறை பேராசிரியர் டிஜு தாமஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, நானோ திரவங்கள், சுற்றுச்சூழல் வளங்கள், ஸ்மார்ட் பொருட்கள், பேட்டரீஸ், மற்றும் உயிர் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. இதில், துறைத் தலைவர் டேனியல் தங்கதுரை, பேராசிரியர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.