கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சரின் கவனத்தை எடுத்துச் செல்வதற்காக, தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை: கனிமவள கொள்ளையைத் தடுக்ககோரி தமிழ்நாடு-கேரள மாநில எல்லைகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தவுள்ளோம்.
குறிப்பாக இந்த கனிமவளக் கொள்ளையில் வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் முக்கிய பிரமுகர்களின் பெயர்களைக் கூறி, கல்குவாரி அதிபர்களிடம் வசூலில் ஈடுபட்டு வருகிறார். சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிலங்கள் பாலைவனமாவது மட்டுமின்றி, நில அதிர்வுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி சட்ட விரோதமாகக் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவையில் உள்ள அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு.பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கோவை மாவட்ட பகுதிகளில் சட்டவிரோத கனிமவள கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தவுள்ளோம்.
குறிப்பாக இந்த கனிமவளக் கொள்ளையில் வடசித்தூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் முக்கிய பிரமுகர்களின் பெயர்களைக் கூறி, கல்குவாரி அதிபர்களிடம் வசூலில் ஈடுபட்டு வருகிறார். சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளால் விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நிலங்கள் பாலைவனமாவது மட்டுமின்றி, நில அதிர்வுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி சட்ட விரோதமாகக் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பழனிச்சாமி தெரிவித்தார்.