கோவை விசைத்தறி சங்க தலைவர் பழனிச்சாமி உயிரிழப்பு - துக்கம் தாளாமல் அவரது மனைவியும் உயிரிழந்த சோகம்!

கோவை சோமனூரை சேர்ந்த விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி, உடல் நலக்குறைவால் நேற்று நள்ளிரவு உயிரிழந்த நிலையில் இன்று காலை அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் சோமனூரில் விசைத்தறி சங்க தலைவர் பழனிசாமி இறந்த துக்கத்தில், அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி(74). விசைத்தறி சங்கத் தலைவரான இவர், விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக விசைத்தறி தொழிலாளர்களுக்கான இலவச மின்சாரம் உட்பட பலவற்றிற்கு பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்களை முன்னெடுத்தவர்.

இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

விசைத்தறி தொழிலாளர்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பழனிச்சாமியின் உயிரிழப்பு விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியிலும் விசைத்தறி சங்கங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கணவர் இறந்த சோகத்தில் இருந்த அவரது மனைவி கருப்பாத்தாள் இன்று காலை உயிரிழந்துள்ளார். கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி மறைவுக்கு விசைத்தறி தொழிலாளர்கள், விசைத்தறி சங்கங்கள், விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...