'வால்பாறை வனப்பகுதியில் விடப்பட்ட மக்னா யானை நலமுடன் உள்ளது..!' - வனத்துறை அதிகாரிகள் தகவல்!

கோவை மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டிருந்த மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, வால்பாறை அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், யானை நலமுடன் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தகவல்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை நலமுடன் இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டிருந்த மக்னா யானையை வனத்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கும்கி யானையின் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



இந்நிலையில், ரேடியோக்காலர் பொருத்தப்பட்டு, கோவையில் இருந்து லாரியின் மூலம் ஏற்றி வரப்பட்ட மக்னா யானை, வால்பாறை அடுத்த மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட மந்திரி மட்டம் அருகே வனப்பகுதியில் இரவு சுமார் 9 மணியளவில் விடுவிக்கப்பட்டது.



விடுவிக்கப்பட்டவுடன், தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் அருந்திய மக்னா யானை, பின்பு வனப்பகுதிக்குள் சென்றது.



இதனிடையே, இன்று காலை ஆற்றின் கரையோரத்தில் நின்றிருந்த மக்னா யானை, தண்ணீர் அருந்திவிட்டு நடந்து சென்ற நிலையில், வனத்துறை யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.



மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில், 24 மணி நேரம் லாரியில் யானை நின்று கொண்டு வந்ததால், யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது என்றும், மயக்க மருந்தின் வீரியம் குறைந்த பின்பு யானை உற்சாகத்துடன் உள்ளதாகவும் யானையை கண்காணித்து வரும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானையை கண்காணிக்க வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் ஆகிய நான்கு வனச்சரகர்கள் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த கண்காணிப்பு பணியில் கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் ஓய்வுபெற்ற மருத்துவர் மனோகரன் மற்றும் சத்தியமங்கலம் வனத்துறை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் வனப்பகுதியில் தங்கியிருந்து யானையை கண்காணித்து வருகின்றனர். தற்போது யானை நலமுடன் இருப்பதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...